மதுரை: வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவி சான்றிதழை வழங்க ஆணை விதிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்சி. மாணவியின் சான்றிதழ்களை 10 நாட்களில் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மாணவர்களின் கல்விச் சான்றை நிறுத்தி வைக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளர். கட்டணம் தரவில்லை என்பதற்காக சான்றுகளை நிறுத்தி வைக்க கல்லூரி நிர்வாகம் வட்டி தொழில் ஏதும் செய்யவில்லை என்று நீதிபதி கூறியுள்ளர்.
The post வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவி சான்றிதழை வழங்க ஆணை: மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.